இந்திய
புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கேரளா மாநில அரசு
நேற்று (14) வழக்கு தாக்கதல் செய்தது. இதன் மூலம் இச்சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த
முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
கேரள
அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில் இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற
தன்மையை மீறுவதாகக் கூறியுள்ளதுடன், நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர்
நரேந்திர மோடியின் இந்து தேசியவாதக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இக்குகுடியுரிமைச்
சட்டம் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்கள்
இந்திய பிராஜவுரிமையை பெறும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது.


